வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம்

339 0

வறட்சி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள 04 மாவட்டங்கிளலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உலக உணவுத் திட்டம் உடன்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

வறட்சி காரணமாக மொனராகலை, குருணாகல், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், 6250 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உலக உணவு திட்டத்தினால் 2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி அரசுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

அந்த நிதி குறித்த பிரதேசங்களில் வசிக்கும் வறுமை மற்றும் வறட்சியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு 10,000 ரூபா படி 04 மாதங்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.