செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றும் ஜேர்மானிய செவியர் ஒருவர் ஏழு ஆண்டுகளாக சோமாலியா நாட்டில் பிடித்துவைக்கப்பட்டுள்ளார்.
அவரை விடுவிக்க ஜெனீவாவை மையமாகக் கொண்ட செஞ்சிலுவைச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சோனியா (Sonja Nientiet) என்னும் ஜேர்மானியப் பெண், சோமாலியா நாட்டில் செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றும்போது 2018ஆம் ஆண்டு கடத்தப்பட்டார்.
ஏழு ஆண்டுகளாக அவர் கடத்தல்காரர்கள் பிடியில் இருக்கும் நிலையில், சமீபத்தில் தன்னை விடுவிக்குமாறு கோரி அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து சோனியாவை உடனடியாக விடுவிக்குமாறு செஞ்சிலுவைச் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.