கித்சிறி ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை (29) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்று தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக காணியின் உரிமையாளருக்கும் அவரது மகளுக்கும் கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டில் கித்சிறி ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை (28) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.