ஹெரோயின் போதை பொருட்களுடன் 7 இளைஞர்கள் கைது

237 0

ஹெரோயின் போதை பொருள் பகற்றுக்களை கைவசம் வைத்திருந்த 7 இளைஞர்களை கினிகத்தேனை காவற்துறை நேற்று இரவு கைது செய்துள்ளது.

கினிகத்தேனை – பெலெக்வோடர் பிரதேசத்தில் வைத்து குறித்த இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து 800 மில்லி கிராம் ஹெரோயின் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் காவற்துறை உத்தியோகஸ்தர் ஒருவரும் அடங்குவதாக கினிகத்தேனை காவற்துறை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.