விபத்துக்குள்ளானவர்களில் லொறி ஓட்டுநர் மற்றும் உதவியாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், லொறி ஓட்டுநரின் உதவியாளர் உட்பட சில பாடசாலை மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த விபத்து தொடர்பில் இங்கிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.