இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் விபத்து – மாணவர்கள் உட்பட 15 பேர் காயம்

11 0
ஹொரணை -இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு  அருகில் தனியார் பஸ் மற்றும்  லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் காயமடைந்து  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளானவர்களில்  லொறி ஓட்டுநர் மற்றும் உதவியாளரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட பின்னர், லொறி ஓட்டுநரின்  உதவியாளர் உட்பட சில  பாடசாலை மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், குறித்த விபத்து தொடர்பில் இங்கிரிய  பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.