பௌசிக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கினை விசாரணை செய்ய திகதி அறிவிப்பு

209 0

அரச வாகனமொன்றை முறைக்கேடாக பயன்படுத்தியது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசிக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழுவால் தொடரப்பட்டிருந்த வழக்கினை விசாரணை செய்ய இன்று நாள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அது , அதனுடன் தொடர்புடைய வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதாகும்.

அதனடிப்படையில் , இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 24ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது வாகனங்களை முறைக்கேடாக பயன்படுத்தியதால் 10 இலட்சம் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக இவர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.