ஆசிரிய உதவியாளர்களுக்கு ஓர் நற்செய்தி

240 0

ஆசிரிய உதவியாளா்களின் கொடுப்பனவை 10 ஆயிரம் ரூபாவாக வழங்குவதற்கான சுற்றுநிரூபங்கள் மாகாணங்களின் பிரதான செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளர் சுனில்ஹெட்டி ஆராச்சி கையொப்பமிட்ட சுற்றுநிரூபங்கள் அனைத்து மாகாணங்களின் பிரதம செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கடந்த பெப்ரவரி மாதம் முதல் நிலுவையுடன் இந்த மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.