அரசாங்க வைத்தியர்களின் பணி பகிஸ்கரிப்பால் யாழ் போதனா வைத்தியசாலை சேவைகள் ஸ்தம்பிதம்

287 0
மாலபே மருத்துவகல்லூரியை தனியார் மருத்துவ கல்லூரியை அரசுடமையாக்க கோரி அரச வைத்திய சங்கத்தினரால் நாடு பூராகவும் முன்னெடுக்கப் பட்டு வரும்  பணிப்பிறக்கணிப்பு  போராட்டத்திற்கு ஆதரவாக யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலை சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.சில வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.எனினும் வைத்தியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையால் வைத்தியசேவைகள் சீராக இடம்பெறவில்லை மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.