தடுப்புச்சுவர் உடைந்து வீழ்ந்ததில் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக பலி!

258 0

அம்பாறை மிஹிந்து புர பிரதேசத்தில் உடைந்து வீழ்ந்த தடுப்புச்சுவரொன்றில் சிக்குண்டு ஒன்றரை வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

இந்த தடுப்புச்சுவர் புதிதாக கட்டப்பட்டுள்ள நிலையில் , விபத்து இடம்பெறும் போது சம்பவ இடத்தில் உயிரிழந்த குழந்தையுடன் மேலுமொரு குழந்தை இருந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர் விபத்துக்குள்ளான குழந்தை அம்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.