தொடரூந்து திணைக்கள சேவையாளர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்

254 0
தொடரூந்து திணைக்கள சேவையாளர்கள் நாளை காலை முதல் 8 மணி முதல் 24 மணிநேர பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தொடரூந்து சேவை நேர கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் இந்தப் பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.
மாலபே தனியார் மருத்துக் கல்லூரி விவகாரம் உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இன்றையபோராட்டத்தின் காரணமாக தனியார் பேருந்து சேவைகளில் எந்த மாற்றங்களும் இல்லை என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.