கணவரை தீ வைத்து கொலை செய்த மனைவி

242 0

எரிகாயங்களுடன் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த நபர் சூரியவெவ மருத்துவமனையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சூரியவெவ காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் , தனது மனைவி தன் மீது தீ வைத்ததாக குறித்த நபர் உயிரிழக்கும் முன்னர் மருத்துவமனையின் மருத்துவரொருவருக்கும் மற்றும் அவரின் சகோதரியொருவருக்கும் தெரிவித்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உடலம் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , உடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

சந்தேகநபரான குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் , இன்று அவர் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.