கொழும்பில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 79 பேருக்கு எதிராக வழக்கு

296 0

கொழும்பு நகரை மையப்படுத்தி நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 79 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காவற்துறை வாகனப்பிரிவுத் தலைமையகம் இதனைத் தெரிவித்துள்ளது.

சிவில் உடையணித்த காவற்துறை அதிகாரிகளும், சிவில் வாகனங்களும் பயன்படுத்தப்பட்டு இந்த சுற்றிவளைப்பு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

கையடக்க பேசியை உபயோகித்தபடி வாகனத்தை செலுத்தியமை, போக்குவரத்து சமிக்ஞைகள் மீறப்பட்டமை, உரிய நிலையங்களுக்கு அப்பால் பேருந்துகள் நிறுத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் குறித்த 79பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.