யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் வியாழக்கிழமை (20) நடைபெற்றன.
மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் இந் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் அணிவகுத்து வர, கொடி, குடை, ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகைதந்த துணைவேந்தர் அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிப் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
மேலும்,பட்டமளிப்பு விழா எதிர்வரும் சனிக்கிழமை (22) வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டமளிப்பு வைபவத்தில் மூவாயிரத்து 920 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.