கடைசி வரிசையில் ஆசனத்தை வழங்குமாறு கோரும் பிரமித

257 0

பிரமித பண்டார தென்னக்கோன் தனக்கு மாகாண சபை அமர்வுகளின் போது கடைசி வரிசையில் ஆசனத்தை வழங்குமாறு கோரியுள்ளார்.

மத்திய மாகாண சபையின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தம்புள்ளை மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து தனது தந்தையார் நீக்கப்பட்டதை அடுத்து, பிரமித பண்டார தென்னக்கோன், மத்திய மாகாண சபையில் தான் வகித்து வந்த அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதனையடுத்து, திலிண பண்டார தென்னக்கோன் குறித்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, மத்திய மாகாண சபையின் அடுத்த அமர்வு எதிர்வரும் 9ம் திகதி இடம்பெறவுள்ளது.