பணி நீக்கம் செய்யப்பட்ட 149 பொலிஸாருக்கு மீண்டும் வாய்ப்பு

248 0

தொண்டர் பொலிஸ் அதிகாரிகளாக இருந்த காலத்தில் திருமணம் முடித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட 149 பேரை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இலங்கை பொலிஸ் சேவையில் தொண்டர் அதிகாரிகளாக இணைந்து கொள்பவர்கள் மூன்று வருடங்களுக்கு திருமணம் முடிக்க அனுமதி இல்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், இவ்வாறு திருமணம் முடித்தமையால் பணி நீக்கம் செய்யப்பட்ட 149 பேரை மீளவும் சேவையில் இணைத்துக் கொள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, பொலிஸ் உப பரிசோதர்கள் மூவர், ஆண் கான்ஸ்டபில்கள் 132 பேர், பெண் கான்ஸ்டபில்கள் 13 பேர் மற்றும் கான்ஸ்டபில் சாரதி ஒருவருமே இவ்வாறு மீளவும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.