மின்னல் தாக்கியதில் பாதிப்புக்குள்ளான ஹட்டன் – எபோட்சிலி மாக்கஸ் தோட்ட பெண் தொழிலாளர்கள் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (04) மாலை 04.00 மணியளவில் தேயிலை மலையில் கொழுந்து பரித்துக் கொண்டிருந்த வேளை கடும் மழையுடன் மின்னல் தாக்கமும் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதிப்படைந்த நால்வரும் உடனடியாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.