கீதா குமாரசிங்கவுக்கு வரிச் சலுகை அடிப்படையில் வழங்கப்பட்ட வாகனங்களுக்கான வரிப் பணத்தை துரிதமாக அறவிடுக!

260 0

கீதா குமாரசிங்கவுக்கு வரிச் சலுகை அடிப்படையில் வழங்கப்பட்ட வாகனங்களுக்கான வரிப் பணத்தை துரிதமாக அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கபே அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்து பதவி நீக்கியுள்ள நிலையிலேயே அவர்கள் இதனைக் கூறியுள்ளனர்.

இதற்கமைய, திரைசேரி செயலாளர் மற்றும் சபாநாயகருக்கு கடிதம் ஒன்றின் மூலம் கபே இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவுக்கு அரசாங்கம் வரி விலக்களித்து வாகன அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளது.

இதனால் அரசுக்கு வரவேண்டிய வரி வறுமானம் இழக்கப்பட்டுள்ளதாக கபே சுட்டிக்காட்டியுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், முடிந்தளவு விரைவாக, கீதாவின் வாகனங்களுக்கான அரச வரிப் பணம் மற்றும் அதற்கு செலவான மேலதிகக் கட்டணங்களை அறவிட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்த அமைப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளது.