பிரித்தானிய இளவரசர் பிலிப் அரச பணிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

442 0

பிரித்தானிய இளவரசர் பிலிப், இந்த ஆண்டு கோடை காலத்துக்கு பின்னர் அரச பணிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது.

தமது கணவரின் முடிவை பிரித்தானிய மகாராணி முழுமையாக ஆதரித்துள்ளார் என பக்கிங்ஹாம் மாளிகையின் பேச்சாரளர் ஒருவர் கூறியதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

எனினும், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை தாம் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் பிரித்தானிய இளவரசர் பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் 96 வயதை எட்டும் இளவரசர் பிலிப், எதிரவ்ரும் ஓகஸ்ட் மாதத்துக்கு பின்னர் பொது நிகழ்ச்சிகளுக்கான அழைப்புகள் எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டார்.

ஆனால், எலிசபெத் மகாராணி தமது அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்பார் என்றும் பக்கிங்ஹாம் மாளிகை அறிவித்துள்ளது.