க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

436 0

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களிடமிருந்து இன்று முதல் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பம்கோரல் இம்மாதம் 31 ஆம் திகதிவரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த விண்ணப்பப்பத்திரங்கள் தபால் மூலமாக பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான விண்ணப்பப்பத்திரங்கள் தொடர்பான தகவல்கள் பத்திரிகை விளம்பரங்களின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.