அத்தியாவசிய சேவைகளை தொடந்து முன்னெடுக்கும் நோக்கிலேயே தமது தலைமையில் புதிய பிரிவு – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

250 0

போராட்டங்கள் மற்றும் பணிப்புறக்கணிப்பு சந்தர்ப்பங்களின்போது அத்தியாவசிய சேவைகளை தொடந்து முன்னெடுக்கும் நோக்கிலேயே தமது தலைமையில் புதிய பிரிவொன்று உருவாக்கப்படவுள்ளதாக அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனி பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தாம் முன்னெக்கும் போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் சரத் பொன்சேகா தலைமையில், புதிய பிரிவொன்றை உருவாக்க முயற்சிப்பதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.