சிரேஷ்ட தமிழ் ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதன் காலமானார்

295 0

இலங்கையின் சிரேஷ்ட தமிழ் ஒலிபரப்பாளர்களுள் ஒருவரான செல்வி சற்சொரூபவதி நாதன் தமது 80 ஆவது வயதில் இன்று காலமானார்.

1937 ஆம் ஆண்டு பிறந்த அவர், கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முதலாவது பெண் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.

சற்சொரூபவதி நாதன் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணடம் இந்து மகளிர் கல்லூரியிலும், உயர் கல்வியை சென்னைப் பல்கலைக் கழகத்திலும் கற்று அறிவியல் பட்டதாரியானார்.

பின்னர் விஞ்ஞான பாட ஆசிரியையாகவும் பணியாற்றியுள்ளார்.

அவர், 1965 ஆம் ஆண்டு ஒலிபரப்புத்துறையில் இணைந்தார்.

இலங்கையின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் சற்சொரூபவதி நாதன், ஜவகர்லால் நேரு விருது, சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருது, வானொலி பவள விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.