போதைப் பொருளுடன் இலங்கைக்கு பயணிக்க முயன்ற இரண்டு பேர் சென்னை வானூர்தி தளத்தில் கைது

228 0

இரண்டு கிலோகிராம் பிரவுன் சுகர் வர்க்க, ஹெரோய்ன் போதைப் பொருளுடன் இலங்கைக்கு பயணிக்க முயன்ற இரண்டு பேர் சென்னை வானூர்தி தளத்தில் கைதுசெய்யப்பட்டனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த இருவரிடமும் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்களிடமிருந்து குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கைதுசெய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கிரேன்ட்பாஸ் பிரதேசத்தில் ஒரு தொகை வல்லாப்பட்டையை தம்வசம் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.