மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்குச் சென்ற 5 பேர் காணாமல் போயுள்ளனர்.

370 0

சவூதி அரேபியா மற்றும் லெபானானுக்கு பணிகளுக்காக சென்ற ஐந்து இலங்கையர்கள் காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகள் தமது நிறுவகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ரக்வானை, காலி, ஹொப்டன், உஹன மற்றும் பிங்கிரிய ஆகிய இடங்களில் இருந்து சென்றவர்கNயு இவ்வாறு காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

2006 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டுக்காலப்பகுதிகளி;ல் இவர்கள் காணாமல்போயுள்ளதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு கோரி சவூதி மற்றும் லெபானானில் பணியாற்றும் ஏனைய இலங்கையர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக 0114379328 அல்லது 0112864136 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.