காதல் பிரச்சினை – மின்கோபுரத்தில் மேல் ஏறியவர் கைது

234 0

பொலன்னறுவை – ஹிங்குரக்கொட பிரதேசத்தின் 150 அடி உயரமான மின்கோபுரத்தில் மேல் ஏறி எதிர்ப்பை வெளிப்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

12 மணித்தியாலங்களின் பின்னர் அவர் மின் கோபுரத்தில் இருந்து இறங்கியதையடுத்து காவற்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

பின்னர் அவர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமது காதல் பிரச்சினைகளின் காரணமாகவே குறித்த மின் கோபுரத்தில் ஏறி தமது உயிரை மாய்த்துக்கொள்ள அவர் முயற்சித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.