வடக்கு சீனாவில் கடுமையான புழுதிப் புயல்

262 0

வடக்கு சீனாவில் கடுமையான புழுதிப் புயல் ஒன்று தாக்கியுள்ளது.

இதனால் தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களின் வளி மிகவும் மாசடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சீனாவின் பல பகுதிகளில் வளிமாசடைதல் அதிகரித்திருந்தது.

இந்தப் புழுதிப் புயல் காரணமாக உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்கப்பட்ட வளியின் தரத்தைவிட அதிக அளவில் பாதிப்பு நிலைமை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மொங்கோலியாவில் இருந்து இந்த புழுதிப் புயல் வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.