புதிய அரசியல் அமைப்பு உருவாக்க, வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை – குழுவின் உறுப்பினர்களுக்கு

233 0

புதிய அரசியல் அமைப்பு உருவாக்க, வழிநடத்தும் குழுவின் இடைக்கால அறிக்கைக்கான ஒருபகுதி வரைவு அந்த குழுவின் உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சபையின் நடத்து குழுக் கூட்டம் அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது இந்த இடைக்கால அறிக்கை வரைவின் ஒருபகுதி அதன் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவின் உள்ளடக்கங்களை ஆராய்ந்து அவை பற்றிய தங்களது அபிப்பிராயங்களை எதிர்வரும் 23 ஆம் திகதி சமர்ப்பிப்பதாக குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் அந்த யோசனைகளையும் உள்ளடக்கிய அறிக்கை 2 மாதங்களில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.