வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம் : அநுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு!

315 0

றக்பி வீரர் வசீம் தாஜூடினின் படுகொலை  சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 18ஆம் திகதிவரை இவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

றக்பி வீரர் வசீம் தாஜூடின் கொலை வழக்கில் அனுர சேனாநாயக்க மற்றும் நாராஹேன்பிட்ட குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், முதலாம் சந்தேக நபரான சுமித் பெரேரா  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.