நாடாளுமன்றில் மறிச்சுக்கட்டி மக்கள்

289 0

மறிச்சுக்கட்டியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களின் சார்பாக, அந்தப் போராட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர், அரசியல் முக்கியஸ்தர்கள் பலரை, நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், நேற்று மாலை சந்தித்து, தமது நிலைப்பாட்டை எடுத்துரைத்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் ஆகியோரைச் சந்தித்து, தமது மண் கையகப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பிலும், அதற்கான பின்னணி தொடர்பிலும் இவர்கள் தெளிவுபடுத்தினர்.

தாங்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்ற போதும், இற்றை வரை நம்பிக்கையான எந்தவிதமான முடிவுகளும் கிடைக்கவில்லையென அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.   மக்களின் துன்ப நிலையைக் கேட்டறிந்து கொண்ட அரசியல் முக்கியஸ்தர்கள், இந்தப் போராட்டம் நியாயமானதெனவும் தமது அரசியல் சக்திக்குட்பட்ட வகையில் இதற்கு பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குவதாகத் தெரிவித்தனர்.   அரசியல் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பு காத்திரமானதாக இருந்ததாகவும் தமது நியாயமான கோரிக்கைக்கு அது வலுவூட்டுவதாகவும் சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.