மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்……(காணொளி)

338 0

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியாலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட கவனயீர்ப்பு போராட்டம் இன்று மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது.

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஊடகவியலாளர்களுக்கான ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியாலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கவனஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளும் கலந்துகொண்டனர்.