வறட்சியான காலநிலை காரணமாக பல லட்சம் பேர் பாதிப்பு

253 0
நாட்டில் நீடிக்கும் வறட்சியான காலநிலை காரணமாக, 2 லட்சத்து 61 ஆயிரத்து 440 குடும்பங்களைச் சேர்ந்த, 9 லட்சத்து 58 ஆயிரத்து 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிக்கையில், இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வறட்சியான காலநிலையால், வடமாகாணமே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 283 குடும்பங்களைச் சேர்ந்த, 4 லட்சத்து 50 ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், திருகோணமலை, அம்பாறை, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வறட்சியான காலைநிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.