திருகோணமலையில் முச்சக்கர வண்டியும், உந்துருளியும் மோதி விபத்து! இருவர் வைத்தியசாலையில்

274 0

திருகோணமலை நகரில் இன்று காலை சுமார் 6.30 மணியளவில் துறைமுக பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நீதிமன்ற சந்தியில் முச்சக்கர வண்டியும், உந்துருளியும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

கடற்படைதள வீதியில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும், நீதிமன்ற வீதியில் இருந்து வந்த உந்துருளியும் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், வாகன சாரதிகள் இருவரும் காயமடைந்துள்ளனர்.

பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொள்கின்றனர்.