அரசாங்கத்திற்கு நாமல் விடுக்கும் சவால்

266 0

முடிந்தால் மே முதலாம் திகதி காலி முகத்திடல் பகுதியை நிரப்பிக் காட்டுங்கள் என அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர் விடுத்த சவாலை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், முடிந்தால் மிக விரைவில் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திற்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

அத்துடன், இந்த சவாலை அரசாங்கம் ஏற்கும் என தான் நம்புவதாகவும், நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.