யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 10 சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் இன்று உத்தரவிட்டார்.
இதனிடையே, வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 10ஆம் மற்றும் 12ஆம் சந்தேக நபர்களுக்கு அண்மையில் பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.