விசேட இராணுவத்தை உருவாக்குவதற்காக தேவைப்பாடு அரசாங்கத்திற்கு இல்லை – பிரதமர்

268 0

விசேட இராணுவத்தை உருவாக்குவதற்காக தேவைப்பாடு அரசாங்கத்திற்கு இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் வைத்து அறிவித்தார்.

அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு புதிய பதவி ஒன்றை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளமை தொடர்பில், ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்தியாவுக்கு சீனாவும் இலங்கையில் முதலீடு செய்யும் போது இலங்கை அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றக் கூடிய நிலை ஏற்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.