ரக்னா லங்கா நிறுவனத்தை மீண்டும் தொடங்க ஜனாதிபதி ஆலோசனை

270 0

நிறைவுறுத்த தீர்மானிக்கப்பட்ட ரக்னா லங்கா நிறுவனத்தை தொடர்ந்து கொண்டு நடத்துவது தொடர்பான யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் பிரதானிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த ஆலோசனையை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனத்தில் பணியாற்றிய ஓய்வு பெற்ற இராணுவத்தினரின் நலனோம்பு விடயங்களை கருத்தில் கொண்டு அதனை மீண்டும் கொண்டு நடத்துவது குறித்த யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பெலவத்த – அகுரேகொட பிரதேசத்தில் அமைக்கப்படும் இராணுவ தலைமையகத்தை அடுத்த வரும் திறக்க முடியும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.