வீதி சட்டங்களை மீறும் சாரதிகளை கைது செய்யும் விசேட வேலைத்திட்டம் நாளை கொழும்பில் ஆரம்பம்

279 0

ஒழுங்கை விதி மற்றும் வீதி சட்டங்களை மீறும் சாரதிகளை கைது செய்யும் விசேட வேலைத்திட்டம் நாளை கொழும்பு நகரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

காவல்துறை தலைமையகம் இதனை அறவித்துள்ளது.

தனியார் வாகனங்களினால் சில காவல்துறையின் சிவில் உடையில் இந்த பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

இதனிடையே, வீதி சட்டங்களை மீறும் சாரதிகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு அறிவிக்க முடியும்.

கொழும்பில் நாளை தினம் ஆரம்பிக்கப்படும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் காலத்தில் நாடளாவிய ரீதியாக விஸ்தரிக்கப்படும் எனவும் காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.