நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து பேருக்கு நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்

299 0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.

3 கோடி ரூபா பணத்தை ஈட்டிய முறை தொடர்பில் வெளிப்படுத்தாமை தொடர்பிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பணச் சலவை சட்;டத்தின் கீழ் சட்டமா அதிபரினால், மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஹெலே கோப் கூட்டுத்தாபனத்திடம் இருந்து கவர்ஸ் கோப்பரேஷன் நிறுவனம் 125 மில்லியன் ரூபா பங்குகளை சந்தேகத்திற்கு இடமான முறையில் கொள்வனவு செய்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து பேர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.