ரத்துபஸ்வல துப்பாக்கி சூட்டு சம்பவம் – இராணுவ வீரர்கள் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

266 0

வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று இராணுவ வீரர்களினதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர்களை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில்; விளக்கமறியலில் வைக்க கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சம்பவத்தில் பலியானவரின் மரண இடம்பெற்ற இடம் தொடர்பில் இரசாயன பகுப்பாய்பவு அறிக்கையை பெற்றுக்கொள்ள அவசியம் என குற்ற விசாரணை திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரியது.

அதன்படி குறித்த இடத்தை பரிசோதனை செய்த அறிக்கையை பெற்றுக்கொடுக்குமாறு நீதவான் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டார்.