பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றியவரை தேடும் காவல்துறையினர்

299 0

திருமண அறிவித்தல் வெளியிட்டு திருமணம் செய்துகொள்வதாக தெரிவித்து பெண்களிடம் 18 லட்சத்து 65 ஆயிரம் ரூபா மோசடி செய்த ஒருவர் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சக்கரவர்த்தி காமினி சில்வா என்ற எல்பிட்டிய நவதகம பிரதேசத்தை சேர்ந்த 57 வயதான சந்தேகத்திற்குரியவரின் புகைப்படத்தை காவல்துறை தலைமையகம் இன்று வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தற்போது கம்பஹா நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், சந்தேசத்திற்குரியவர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறை தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

அவர் தொடர்பில் தகவல் தெரிந்தால் கம்பஹா குற்ற விசாரணை பிரிவிற்கு 077 38 90 959 என்ற இலக்கத்திகோ அல்லது 077 078 00 71 என்ற இலக்கத்திற்கோ தகவல் அளிக்குமாறு காவல்துறை தலைமையகம் கோரியுள்ளது.