சந்தேக நபரான கயான் விக்ரமதிலக்கே துபாயில் வைத்து குற்றப்புலானாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில், சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.