தையிட்டி சட்ட விரோத விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுக்கு அழைப்புக் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டளையில் வியாழக்கிழமை (20) பகல் 12.00 மணிக்கு பலாலி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இராணுவத்தினரின் துணையுடன் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி சட்ட விரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானங்களை அகற்றக் கோரி ஒவ்வொரு பெளர்ணமி நாட்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குறித்த போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே பலாலி பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு இவ் அழைப்புக் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.