மித்தெனிய கடேவத்த சந்தி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர் “கஜ்ஜா” என்ற அருண விதானகமகே என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இறந்தவரின் மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும், உயிரிழந்தவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 39 வயதான கஜ்ஜா என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மகளும், மகனும் படுகாயமடைந்த நிலையில், தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 6 வயதான சிறுமி காலை உயிரிழந்தார்.
மேலும் 9 வயது சிறுவன் எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
சம்பவத்திற்கு T56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை கைது செய்ய மித்தெனிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்