பாகிஸ்தான் கடற்படைக்கப்பல் இலங்கையில்

272 0

பாகிஸ்தானிய கடற்படைக்குச் சொந்தமான “ டாஸ்ற் ” என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

நல்லெண்ண அடிப்படையில் விஜயத்தை மேற்கொண்டு நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த பாகிஸ்தானிய கப்பலுக்கு இலங்கை கடற்படை வரவேற்பளித்தது.

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலப்பகுதியில் பல நிகழ்வுகளில் இருநாட்டு கடற்படை வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய கப்பலாக “ டாஸ்ற் ” எதிர்வரும் 6 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும்.