கீதா குமாரசிங்கவினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

282 0

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க முடியாது என சற்றுமுன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கீதா குமாரசிங்க சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய இரண்டு நாடுகளிலும் குடியுரிமை பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொண்ட கீதா குமாரசிங்க, அரசியல் அமைப்பின் அடிப்படையில் இலங்கை பாராளுமன்றில் அங்கம் வகிக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது