பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு ; சாரதி கைது

31 0

சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேலியகொடை – சிலாபம் வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை இடம்பெற்ற விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வீதியில் பயணித்த மூதாட்டி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மூதாட்டி, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 85 வயதுடைய மூதாட்டி ஆவார்.

இதனையடுத்து, பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.