இந்து சமுத்திர நீரில் கழிவுகள் – இலங்கை உள்ளிட்ட பல்வேறு தீவுகளுக்கு பாதிப்பு என எச்சரிக்கை

295 0

இந்து சமுத்திர நீரில் கழிவுகள் பரவுவதன் காரணமாக இலங்கை உள்ளிட்ட பல்வேறு தீவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பூகோளவியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அண்மையில் வெளியிடப்பட்ட வரைபடமொன்றில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்திய மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் சில நதிகளிலிருந்து சமுத்திரத்தில் சேரும் கழிவுகளால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்து சமுத்திர நாடுகள், சர்வதேச சட்டத்துக்கமைய செயற்பட வேண்டும் என பேராதனை பல்கலைக்கழக பூகோளவியல் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.