சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ன செய்ய வேண்டும் – கிழக்கு மாகாண முதலமைச்சர் தெளிவுப்படுத்துகிறார்.

270 0

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்படுவதன் ஊடாகவே சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனை தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள காணிகளில் பேரினவாதிகளின் அத்துமீறல், சிறுபான்மை மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டக்காட்டினார்.

காணி, காவற்துறை மற்றும் நிதியதிகாரஙகள் விரைவில் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவேண்டும்.

அதனூடாக மாத்திமே இன்று சிறுபான்மை சமூகங்கள் எதிர்நோக்கும் காணி ஆக்கிரமிப்பு மற்றும் இனவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என ஹாபிஸ் நசீர் அஹமட் வலியுறுத்தினார்.