வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் இன்று 3ஆவது நாளாக ஆர்ப்பாட்டத்தில்….(கானொளி)

322 0

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய புதிய அதிபருக்கு எதிராக மூன்றாவது நாளாக இன்று மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 4 வருடங்களுக்கு மேலாக செட்டிகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய அதிபர் செ.தர்மரட்ணத்தின் காலத்தில் பாடசாலை கல்வி மற்றும் பௌதீக ரீதியில் அபிவிருத்தி அடைந்துள்ள நிலையில், புதிய அதிபராக நித்தியானந்தம் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஏற்கனவே பதவி வகித்த பாடசாலைகளில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகவும், அதனால் இவ் அதிபர் நியமனத்தை எதிர்ப்பதாகவும் தெரிவித்து மாணவர்கள், பெற்றோர்கள் பழைய மாணவர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலைக்கு தரம் 1 அதிபர் நியமிக்கப்படவேண்டும் எனவும், அதற்கான தகுதி தனக்குள்ள போதிலும் நியமனம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்து, செட்டிகுளம் பிரதேசத்தினை சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

இதன் அடிப்படையிலேயே குறித்த அதிபர் நியமனம் தற்போது இடம்பெற்றுள்ளது.

இருப்பினும் இரண்டாம் தவணை ஆரம்பித்த நாளில் இருந்து மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாது பாடசாலை முன்பாக பெற்றோர், பழைய மாணவர்களுடன் இணைந்து பேராடி வருகின்றனர். தமக்கு பழைய அதிபர் அல்லது வேறு ஒரு அதிபரை நியமிக்குமாறும் தற்போது நியமிக்கப்பட்டவர் தமக்கு வேண்டாம் எனத் தெரிவித்தே குறித்த போராட்டத்தில் மாணவர்கள்தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.