எமது கட்சி எந்தவொரு தேர்தலுக்கும் சவாலுக்கும் தயார்

241 0

தமது கட்சி எந்தவொரு தேர்தலுக்கும் சவாலுக்கும் தயாராகவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கெம்பல் மைதானத்தில் இடம்பெறும் மே தின நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

மேலும், கடந்த வாரம் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை கிடைக்கப் பெற்றமையால், 6600 பொருட்களை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜீ.ஸ்.பி பிளஸ் கிடைக்கப் பெற்றுள்ளமையால், புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையின் பொருளாதாரம் தொடர்பிலான பல வேலைத் திட்டங்களுக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.