இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள்

199 0

இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் நேற்று இடம்பெற்ற 38 ஆவது மற்றும் 39 ஆவது போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரைஸிங் பூனே சுப்பர்ஜியன்ட் அணிகள் வெற்றிபெற்றுள்ளன.

மும்பையில் இடம்பெற்ற, ரோயல் சலஞ்சேர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஹ் அணி, 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் சலஞ்சேர்ஸ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மும்பாய் இந்தியன்ஸ் அணி 19.5 ஓவர் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.

இதேவேளை, குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக நேற்று இரவு இடம்பெற்ற போட்டியில், ரைசிங் புனே சுப்பர்ஜியன்ட் அணி, 5 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

புனேயில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரைசிங் புனே சுப்பர் ஜியன்ட் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதற்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய குஜரத் லயன்ஸ் அணி, 19.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 162 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ரைசிங் புனே சுப்பர் ஜியன்ட் அணி, 19.5 ஓவர்களில்5 விக்கட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களைப்பெற்று வெற்றியடைந்தது.

இதேவேளை, டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று இரவு 8 மணிக்கு இடம்பெறவுள்ளது.